மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!
Jan 14, 2026, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை தொடங்குகிறார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் 3 அடுக்குகளாக மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேக விழா, இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை கடந்த ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தையும் உத்தர பிரதேசத்தில் இருந்தே தொடங்க பா.ஜ.க.வினர் முடிவு செய்திருக்கிறார்கள். அதாவது, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க. இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவில்லை.

எனவே, இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்த கையோடு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கின்றனர். அந்த வகையில், உ.பி. மாநிலம் புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பா.ஜ.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தப் பேரணியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தனது மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு உ.பி. மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜ.க. 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆகவே, இத்தேர்தலில் அதைவிடக் கூடுதல் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Tags: PM Modielection compaignUttat Pradesh
ShareTweetSendShare
Previous Post

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்வு! – மத்திய அரசு

Next Post

இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies