மம்தா பானர்ஜியின் அறிவிப்பு "இண்டி" கூட்டணிக்கு சாவுமணி: பா.ஜ.க. கருத்து!
Oct 3, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு “இண்டி” கூட்டணிக்கு சாவுமணி: பா.ஜ.க. கருத்து!

Web Desk by Web Desk
Jan 25, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு “இண்டி” கூட்டணிக்கு சாவுமணி. அரசியல் திருமணம் நடப்பதற்கு முன்பே ‘தலாக்’ நடந்து விட்டது. “இண்டி” கூட்டணி கீரியும், பாம்பும் அமைத்த இயற்கைக்கு மாறான கூட்டணி என்று பா.ஜ.க. தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக, எதிர்கட்சிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் “இண்டி” என்கிற பெயரில் கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியில் மாநிலத்திலுள்ள பிரதானக் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

எனினும், இக்கூட்டணிக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதாகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

இதேபோலவே, பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் காங்கிரஸ் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழகத்திலோ சனாதனம் பற்றி தி.மு.க. விமர்சித்து காங்கிரஸ் கட்சிக்கு வேறு மாதிரியாக தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மேற்கவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் ஆம் ஆத்மி கட்சியின் பகவத் மானும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார்.

இதையடுத்து, மம்தா பானர்ஜி இண்டி கூட்டணிக்கு சாவுமணி அடித்து விட்டார் என்று பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதுகுறித்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், தனித்துப் போட்டி என்ற மம்தா பானர்ஜியின் அறிவிப்பு விரக்தியின் வெளிப்பாடாகும். தேர்தலுக்குப் பிறகு தனது பேச்சு எடுபட வேண்டும் என்பதற்காக அனைத்து தொகுதிகளிலும் அவர் போட்டியிட விரும்புகிறார். எதிர்கட்சி கூட்டணியின் முகமாக உருவெடுக்க வேண்டும் என்று கருதினார்.

ஆனால், யாருமே அவரது பெயரை முன்மொழியவில்லை. பலமுறை டெல்லி சென்றும் அது பலனளிக்கவில்லை. இதனால், தர்மசங்கடம் அடைந்த மம்தா, மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, தான் போட்டியில் இல்லை என்பதை உணர்த்தினார்.

தற்போது, ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்க மாநிலத்துக்கு வரும் நிலையில், தனித்துப் போட்டி என்று மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது ‘இண்டி’ கூட்டணிக்கு சாவுமணியாக அமைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பா.ஜ.க. தேசியச் செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறுகையில், “எதிர்கட்சிகள் அமைத்தது ஒரு காகித கூட்டணி. அவர்களிடம் செயல்திட்டமோ, தலைமையோ இல்லை” என்று விமர்சித்திருக்கிறார்.

அதேபோல, பா.ஜ.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா கூறுகையில், “அரசியல் திருமணம் நடப்பதற்கு முன்பே ‘தலாக்’ நடந்து விட்டது. ஒருபக்கம் இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் ‘இண்டி’ கூட்டணி கட்டிடம் தினந்தோறும் இடிந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா கூறுகையில், “இண்டி கூட்டணி கீரியும் பாம்பும் அமைத்த இயற்கைக்கு மாறான கூட்டணி. ஒவ்வொரு கட்சியும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிட்டவை. ஆகவே, அக்கூட்டணி இயற்கை மரணத்தைத் தழுவப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: CongressINDI AllianceBJP attackMamata BanerjeeAnnouncement
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்: மத்திய அமைச்சர் உறுதி!

Next Post

அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்ற 7 அடி வாள் !

Related News

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies