நடிகர் மன்சூர் அலிகான் தனது அலுவலகத்தில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 75 -வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல, தமிழகத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது.
குடியரசுத் தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டுவது வழக்கம்.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, அவர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றினார்.
உடன் இருந்தவர்கள் பதறிப்பாய், அதனை மன்சூர் அலிகானிடம் தெரிவித்தனர். உடனே, சுதாரிக்கொண்ட மன்சூர் அலிகான், தேசியக் கொடியை கீழே இறக்கினார். பின்னர், தேசிய கொடியை மீண்டும் சரியான முறையில் ஏற்றி வைத்தார்.