அயோத்தி புறவழிச்சாலை: பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் அமைப்பு!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி புறவழிச்சாலை: பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் 67.57 கி.மீ. தூர புறவழிச்சாலை பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இக்கோவிலை உலக அளவில் பிரபலப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு உறுதி பூண்டிருக்கிறது. ஆகவே, அயோத்தியில் 1,450 கோடி ரூபாயில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டதோடு, 450 கோடி ரூபாயில் இரயில் நிலையமும் மேம்படுத்தப்பட்டது.

மேலும், அயோத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 11,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இராமர் கோவில் கட்டப்பட்டிருக்கும் அயோத்தியில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ், 67.57 கிலோ மீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் அயோத்தியில் 67.57 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. லக்னௌ, பஸ்தி கோண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், மேற்கண்ட மாவட்டங்களில் சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் உட்பட பொருளாதார சமூக மற்றும் தளவாட முனைகளின் இணைப்பை மேம்படுத்த உதவும்.

மேலும், லக்னௌ – கோரக்பூர் பொருளாதார மையங்களுக்கு இடையே அயோத்தி அமைந்திருப்பதால் தோல் கட்டுமானப் பொருட்கள் இரும்பு எஃக்கு போன்ற முக்கிய பொருட்கள் இதன் வழியாகச் செல்கின்றன. தற்போது, இந்த புறவழிச்சாலை தடையின்றி சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.

நாட்டில் உட்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை ஒருங்கிணைப்பதே ‘கதி சக்தி’ திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, 16 மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் தளவாடச் செலவுகள் குறைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: AyodyaBypass RoadPM kathi Sakthi Scheme
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் அபார வெற்றி !

Next Post

அண்டார்டிகாவில் பறந்த இந்திய தேசிய கொடி !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies