அயோத்தி புறவழிச்சாலை: பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் அமைப்பு!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி புறவழிச்சாலை: பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் 67.57 கி.மீ. தூர புறவழிச்சாலை பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இக்கோவிலை உலக அளவில் பிரபலப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு உறுதி பூண்டிருக்கிறது. ஆகவே, அயோத்தியில் 1,450 கோடி ரூபாயில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டதோடு, 450 கோடி ரூபாயில் இரயில் நிலையமும் மேம்படுத்தப்பட்டது.

மேலும், அயோத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 11,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இராமர் கோவில் கட்டப்பட்டிருக்கும் அயோத்தியில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ், 67.57 கிலோ மீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் அயோத்தியில் 67.57 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. லக்னௌ, பஸ்தி கோண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், மேற்கண்ட மாவட்டங்களில் சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் உட்பட பொருளாதார சமூக மற்றும் தளவாட முனைகளின் இணைப்பை மேம்படுத்த உதவும்.

மேலும், லக்னௌ – கோரக்பூர் பொருளாதார மையங்களுக்கு இடையே அயோத்தி அமைந்திருப்பதால் தோல் கட்டுமானப் பொருட்கள் இரும்பு எஃக்கு போன்ற முக்கிய பொருட்கள் இதன் வழியாகச் செல்கின்றன. தற்போது, இந்த புறவழிச்சாலை தடையின்றி சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.

நாட்டில் உட்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை ஒருங்கிணைப்பதே ‘கதி சக்தி’ திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, 16 மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் தளவாடச் செலவுகள் குறைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: AyodyaBypass RoadPM kathi Sakthi Scheme
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் அபார வெற்றி !

Next Post

அண்டார்டிகாவில் பறந்த இந்திய தேசிய கொடி !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies