அயோத்தி புறவழிச்சாலை: பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் அமைப்பு!
Aug 5, 2026, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி புறவழிச்சாலை: பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் 67.57 கி.மீ. தூர புறவழிச்சாலை பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இக்கோவிலை உலக அளவில் பிரபலப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு உறுதி பூண்டிருக்கிறது. ஆகவே, அயோத்தியில் 1,450 கோடி ரூபாயில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டதோடு, 450 கோடி ரூபாயில் இரயில் நிலையமும் மேம்படுத்தப்பட்டது.

மேலும், அயோத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 11,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இராமர் கோவில் கட்டப்பட்டிருக்கும் அயோத்தியில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ், 67.57 கிலோ மீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் அயோத்தியில் 67.57 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. லக்னௌ, பஸ்தி கோண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், மேற்கண்ட மாவட்டங்களில் சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் உட்பட பொருளாதார சமூக மற்றும் தளவாட முனைகளின் இணைப்பை மேம்படுத்த உதவும்.

மேலும், லக்னௌ – கோரக்பூர் பொருளாதார மையங்களுக்கு இடையே அயோத்தி அமைந்திருப்பதால் தோல் கட்டுமானப் பொருட்கள் இரும்பு எஃக்கு போன்ற முக்கிய பொருட்கள் இதன் வழியாகச் செல்கின்றன. தற்போது, இந்த புறவழிச்சாலை தடையின்றி சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.

நாட்டில் உட்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை ஒருங்கிணைப்பதே ‘கதி சக்தி’ திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, 16 மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் தளவாடச் செலவுகள் குறைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: AyodyaBypass RoadPM kathi Sakthi Scheme
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் அபார வெற்றி !

Next Post

அண்டார்டிகாவில் பறந்த இந்திய தேசிய கொடி !

Related News

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies