இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் போட்டி நடந்த மைதானத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 436 ரன்களை எடுத்தது.

தற்போது இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் மைதானத்திற்கு சென்றிருந்தார்.

இவர் போட்டி நடந்த மைதானத்தில் ஓவியத்தை அப்படியே தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். அதிலும் ஒட்டுமொத்த மைதானத்தையும் ஒரே ஓவியத்தில் அவர் கொண்டு வந்திருந்தார்.

மைதான மேற்கூரையில் துவங்கி, இருக்கைகள், ரசிகர்கள், வீரர்கள், ஆடுகளம், அம்பயர் முதற்கொண்டு எல்லாவற்றையும் ஒரே ஓவியத்தில் அவர் தத்ரூபமாக வரைந்தார். இவர் கேன்வாஸ் பெயின்டிங் முறையில் இந்த ஓவியத்தை தீட்டி இருந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆன்டி பிரவுன் உலகம் முழுவதும் சுற்றி ஓவியம் வரைந்து வரும் ஓவியக் கலைஞர் ஆவார். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளை வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிகளை நேரில் கண்டு, அதை அப்படியே வரைந்து இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை ஓவியமாக வரைய விரும்பி இருக்கிறார். அதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்று முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் ஐதராபாத்திற்கு சென்று போட்டியை நேரில் கண்டு அதை ஓவியமாக வரைந்தார்.

போட்டி ஒளிபரப்பின் இடையிலும் அவரது ஓவியம் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது திரையில் தெரிந்த மைதானத்திற்கும், அவரது ஓவியத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அந்த அளவுக்கு புகைப்படம் போலவே இருந்தது ஆன்டி பிரவுன் வரைந்த ஓவியம்.

இந்த ஓவியம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

https://www.instagram.com/indiancricketteam/reel/C2kWJTGsp2r/

Tags: Indiasportsenglandhydreabadfirst Test matchandy brown drawing
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி: ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்!

Next Post

உலகின் குருவாக இந்தியா மாறும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies