இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !
Sep 9, 2025, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !

Web Desk by Web Desk
Jan 27, 2024, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் போட்டி நடந்த மைதானத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 436 ரன்களை எடுத்தது.

தற்போது இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் மைதானத்திற்கு சென்றிருந்தார்.

இவர் போட்டி நடந்த மைதானத்தில் ஓவியத்தை அப்படியே தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். அதிலும் ஒட்டுமொத்த மைதானத்தையும் ஒரே ஓவியத்தில் அவர் கொண்டு வந்திருந்தார்.

மைதான மேற்கூரையில் துவங்கி, இருக்கைகள், ரசிகர்கள், வீரர்கள், ஆடுகளம், அம்பயர் முதற்கொண்டு எல்லாவற்றையும் ஒரே ஓவியத்தில் அவர் தத்ரூபமாக வரைந்தார். இவர் கேன்வாஸ் பெயின்டிங் முறையில் இந்த ஓவியத்தை தீட்டி இருந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆன்டி பிரவுன் உலகம் முழுவதும் சுற்றி ஓவியம் வரைந்து வரும் ஓவியக் கலைஞர் ஆவார். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளை வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிகளை நேரில் கண்டு, அதை அப்படியே வரைந்து இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை ஓவியமாக வரைய விரும்பி இருக்கிறார். அதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்று முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் ஐதராபாத்திற்கு சென்று போட்டியை நேரில் கண்டு அதை ஓவியமாக வரைந்தார்.

போட்டி ஒளிபரப்பின் இடையிலும் அவரது ஓவியம் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது திரையில் தெரிந்த மைதானத்திற்கும், அவரது ஓவியத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அந்த அளவுக்கு புகைப்படம் போலவே இருந்தது ஆன்டி பிரவுன் வரைந்த ஓவியம்.

இந்த ஓவியம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

https://www.instagram.com/indiancricketteam/reel/C2kWJTGsp2r/

Tags: andy brown drawingIndiasportsenglandhydreabadfirst Test match
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி: ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்!

Next Post

உலகின் குருவாக இந்தியா மாறும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Related News

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies