உலகின் குருவாக இந்தியா மாறும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Sep 10, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் குருவாக இந்தியா மாறும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 02:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாம் சகோதரத்துவத்துடனும், அரசியல் கொள்கைகளை பின்பற்றியும் வாழ வேண்டும். அப்போதுதான், நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இன்னும் சில ஆண்டுகளில் உலகுக்கே குருவாக இந்தியா மாறும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியேற்றினார். பின்னர், கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய மோகன் பகவத், “நமது நாடு தற்போது தர்மத்தின் வழியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சக்தி நமக்கு எங்கிருந்து கிடைத்தது என்றால், அந்த சக்தி எப்போதும் நம்மிடம்தான் இருக்கிறது. ஆனால், அதை நாம் முறையாகப் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். நமது நாடு காலம் காலமாக பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது. ஆகவே, நமக்குள் பல வேற்றுமைகள் இருக்கலாம்.

ஆனாலும், நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் கிடைக்கும். மேலும், மக்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். நாட்டின் அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதில் அரசைவிட மக்களுக்குத்தான் முக்கிய கடமை உள்ளது.

ஆகவே, அதை நிறைவேற்றுவதற்கு மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். அதுவே வளர்ச்சியை உறுதி செய்வதாக இருக்கும். நாம் வித்தியாசமாகத் தோன்றினாலும், பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் பாரம்பரியம் நம் நாட்டில் உள்ளது.

அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்பட்டிருப்பது  நாட்டு மக்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது. இந்த உத்வேகம் ஒரு நாளுடன் நின்று விடாமல், தினமும் தொடர வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகுக்கே குருவாக விளங்கும்” என்றார்.

Tags: RSS ChiefRepublic dayMohan bagawat
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !

Next Post

நீலகிரியில் தொடரும் பனிப்பொழிவு – வானிலை மையம் எச்சரிக்கை!

Related News

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies