இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !
Jun 13, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் போட்டி நடந்த மைதானத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 436 ரன்களை எடுத்தது.

தற்போது இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் மைதானத்திற்கு சென்றிருந்தார்.

இவர் போட்டி நடந்த மைதானத்தில் ஓவியத்தை அப்படியே தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். அதிலும் ஒட்டுமொத்த மைதானத்தையும் ஒரே ஓவியத்தில் அவர் கொண்டு வந்திருந்தார்.

மைதான மேற்கூரையில் துவங்கி, இருக்கைகள், ரசிகர்கள், வீரர்கள், ஆடுகளம், அம்பயர் முதற்கொண்டு எல்லாவற்றையும் ஒரே ஓவியத்தில் அவர் தத்ரூபமாக வரைந்தார். இவர் கேன்வாஸ் பெயின்டிங் முறையில் இந்த ஓவியத்தை தீட்டி இருந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆன்டி பிரவுன் உலகம் முழுவதும் சுற்றி ஓவியம் வரைந்து வரும் ஓவியக் கலைஞர் ஆவார். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளை வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிகளை நேரில் கண்டு, அதை அப்படியே வரைந்து இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை ஓவியமாக வரைய விரும்பி இருக்கிறார். அதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்று முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் ஐதராபாத்திற்கு சென்று போட்டியை நேரில் கண்டு அதை ஓவியமாக வரைந்தார்.

போட்டி ஒளிபரப்பின் இடையிலும் அவரது ஓவியம் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது திரையில் தெரிந்த மைதானத்திற்கும், அவரது ஓவியத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அந்த அளவுக்கு புகைப்படம் போலவே இருந்தது ஆன்டி பிரவுன் வரைந்த ஓவியம்.

இந்த ஓவியம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

https://www.instagram.com/indiancricketteam/reel/C2kWJTGsp2r/

Tags: andy brown drawingIndiasportsenglandhydreabadfirst Test match
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி: ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்!

Next Post

உலகின் குருவாக இந்தியா மாறும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies