உங்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: பிரதமரை புகழ்ந்த புதுவை முதல்வர்!
Jan 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உங்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: பிரதமரை புகழ்ந்த புதுவை முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமரை வணங்கிய கரங்கள், பிரதமர் மோடியை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. இராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் தேசம் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புகழாரம் சூட்டி கடிதம் எழுதி இருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார்.

இதையடுத்து, பக்தர்கள் தரிசனத்துக்காக கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி இராமரை தரிசனம் செய்தவாறு இருக்கின்றனர். கடந்த 4 நாட்களில் மட்டும் 22 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், இராமரை வணங்கிய கரங்கள், பிரதமர் மோடியையும் நன்றியுடன் வணங்குவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியிருக்கிறார். இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருக்கிறார்.

அக்கடிதத்தில், “கடந்த 22-ம் தேதி அயோத்தியில் நடந்த இராமர் கோவில் கும்பாபிஷேக வரலாற்று நிகழ்வால், லட்சக்கணக்கான இந்தியர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும், பக்தியாலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது. இராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது.

பகவான் ஸ்ரீராமரைப் போலவே, பிரதமரின் மனிதநேயம், தார்மீக  ஒருமைப்பாட்டிற்கான சேவை ஈடு இணையற்றது. பகவான் இராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று தனது வாழ்க்கையை நிலத்திற்கும், உயிர்களுக்கும் சேவை செய்து அர்ப்பணித்தார்.

அதேபோல, பகவான் இராமரின் பாதச் சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுவை மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiletterPuducherryPraisedCM Rengasamy
ShareTweetSendShare
Previous Post

ஈராக்கில் “மாஸ்” மரண தண்டனை: மனித உரிமை அமைப்பு கண்டனம்!

Next Post

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies