ஈராக்கில் "மாஸ்" மரண தண்டனை: மனித உரிமை அமைப்பு கண்டனம்!
Apr 29, 2026, 11:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈராக்கில் “மாஸ்” மரண தண்டனை: மனித உரிமை அமைப்பு கண்டனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈராக்கில் “மாஸ்” மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்கதையாகி இருக்கும் நிலையில், பல்வேறு குற்றச்செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட 13 சிறைக் கைதிகளுக்கு திடீரென ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஈராக் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றும் ஒரே சிறையாக தெற்கு மாகாணத்தில்  உள்ள நசிரியா சிறை இருந்து வருகிறது. இந்த சிறையில் பல முறை “மாஸ்” மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 2017-ம் ஆண்டு 3 மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில், முறையே 41 மற்றும் 38 பேர் கொண்ட 2 வெகுஜன மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

இதன் காரணமாக, ஈராக்கியர்கள் நசிரியா சிறையை “அல் ஹவுட்” அல்லது திமிங்கலம் என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில், திமிங்கலம் மீன்களை விழுங்குவது போல இச்சிறை மக்களை விழுங்குகிறது. எனினும், 2020-ம் ஆண்டு முதல் இதுபோன்ற வெகுஜன மரண தண்டனைகள் படிப்படியாகக் குறைந்து வந்தன. இது ஆறுதல் அளிப்பதாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வெகுஜன மரண தண்டனை அரங்கேறத் தொடங்கி இருக்கிறது.

அதாவது, ஈராக்கில் பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட சுமார் 8,000 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.  கடந்த 25-ம் தேதி நசிரியா சிறையில் 13 கைதிகளுக்கு மாஸ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல்நாள் மாலை ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு மறுநாள் அதிகாலையிலேயே மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

முன்பெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முறையான அறிவிப்பு தெரிவித்த பிறகு, நாள் குறித்து தண்டனையை நிறைவேற்றி வந்தனர். ஆனால், தற்போது திடீரென 13 சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதுகுறித்து நசிரியா சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது வழக்கறிஞரிடம்,  “தூக்கிலிடப்படவிருக்கும் 13 பேரின் பெயர்கள் 24-ம் தேதி மாலை சிறையின் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையில் அதிகாரிகள் தூக்கிலிட்டு விட்டனர். மேலும், அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களது குடும்பத்தினரையோ அல்லது வழக்கறிஞர்களோ அழைக்க அனுமதிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இச்சம்பவத்துக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஈராக் ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் கூறுகையில், “ஈராக்கில் வெகுஜன மரண தண்டனைகள் புதுப்பிக்கப்படுவது ஒரு மோசமான வளர்ச்சியாகும். ஈராக் அரசாங்கம் உடனடியாக மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஈராக்கிய ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், “ரகசிய மரண தண்டனைகள்” என்று தெரிவித்திருக்கிறது. மேலும், வெளிப்படைத்தன்மை அல்லது முன்னறிவிப்பு இல்லாமல் மரண தண்டனைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றும் தெரிவித்திருக்கிறது.

Tags: iraqUnlawfullMass ExecutionsResume
ShareTweetSendShare
Previous Post

டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 

Next Post

உங்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: பிரதமரை புகழ்ந்த புதுவை முதல்வர்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies