நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்திருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. ஆகவே, தேர்தல் வியூகம் வகுப்பது உட்பட பல்வேறு விஷயங்களில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்திருக்கிறது.
அந்த வகையில், தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் தேர்தல் பொறுப்பாளராக சத்யகுமார், அருணாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக அசோக் சிங்கால், பீகார் தேர்தல் பொறுப்பாளராக வினோத் தாவ்டே, இணை பொறுப்பாளராக தீபக்பிரகாஷ் எம்.பி., சண்டிகார் தேர்தல் பொறுப்பாளராக விஜய்பாய்ரூபனி எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
டாமன் டையூ தீவுகளின் தேர்தல் பொறுப்பாளராக புர்னேஷ் மோடி எம் எல்.ஏ., இணைப் பொறுப்பாளராக துஷ்யந்த் பட்டேல் ஆகியோரும், கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக ஆஷிஷ்சூட், ஹிரியானா தேர்தல் பொறுப்பாளராக பிப்லாப்குமார் தேவ் எம்.பி., இணை பொறுப்பாளராக சுரேந்திரசிங் நாகர் எம்.பி., இமாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் சர்மா, இணை பொறுப்பாளராக சஞ்சய் தாண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் பொறுப்பாளராக தரூண் ஷுக், இணை பொறுப்பாளராக ஆஷிஸ்சூட், லடாக் தேர்தல் பொறுப்பாளராக தருண் ஷுக், ஜார்க்கண்ட்: தேர்தல் பொறுப்பாளராக லட்சுமிகாந்த் பாஜ்பாய், கர்நாடகா தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன்தாஸ் அகர்வால் எம்.பி., இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோல கேரளா தேர்தல் பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகர், லட்சத்தீவு தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன், மத்திய பிரதேச தேர்தல் பொறுப்பாளராக மகேந்திரகுமார் சிங், இணை பொறுப்பாளராக சதீஷ் உபாத்யாய, ஒடிஸா தேர்தல் பொறுப்பாளராக விஜய்பால் சிங் தோமர் எம்.பி., இணை பொறுப்பாளராக லதா உசேந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா, பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளராக விஜய்பாய் ரூபானி எம்.எல்.ஏ., இணை பொறுப்பாளராக நரேந்திரசிங், சிக்கிம் தேர்தல் பொறுப்பாளராக திலீப் ஜெய்ச்வால், உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளராக பாய்ஜெயந்த் ஜெய்பாண்டே, உத்தரகாண்ட் தேர்தல் பொறுப்பாளராக துஷ்யந்த்குமார் கவுதம், மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராக மங்கல்பாண்டே, இணைப் பொறுப்பாளர்களாக அமித் மல்வியா, ஆஷா லக்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகவல் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.