AI உதவியால் எழுதிய நாவலுக்கு விருது !
May 29, 2025, 12:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

AI உதவியால் எழுதிய நாவலுக்கு விருது !

Web Desk by Web Desk
Jan 28, 2024, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பானில் ‘அகுடகாவா’ விருது பெற்ற ஒரு நாள் ChatGPT-யை பயன்படுத்தி எழுதியது என அந்த நாவலின் எழுத்தாளர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் ஆண்டுதோறும் இலக்கியத்துறையில் சாதித்து வரும் எழுத்தாளர்களுக்கு ஜப்பான் நாட்டு அரசாங்கத்தால் இலக்கியத்துறையின் உயரிய விருதான ‘அகுடகாவா’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 170-வது அகுடகாவா விருதுக்கான தேர்வில் ஜப்பான் நாட்டின் எழுத்தாளரான ரீ குடான் என்ற பெண்ணுக்கு, சிறந்த புனைவுக்கதை என்ற பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது. அறிவியல் துறை சார்ந்த புனைவுக் கதையான ‘டோக்கியோ சிம்பதி டவர்’ என்ற நாவலை எழுதியதற்காக குடான் பரிசு பெற்றார்.

விருது பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த குடான், “எனக்கு விருது பெற்றுத் தந்த இந்தப் புத்தகத்தை எழுத செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்ஜிபிடியை (ChatGPT) பயன்படுத்தினேன்.

அந்தப் புத்தகத்தில் உள்ள உள்ளடக்கங்களில் 5 சதவிகிதம் கருத்துகள் (ChatGPT)சாட்ஜிபிடியால் எழுதப்பட்டவைதான். என்னால் சில விஷயங்களை யாரிடமும் சொல்லமுடியாதபோது (ChatGPT)சாட்ஜிபிடியிடம் தான் பகிர்ந்துகொள்வேன்.

அதுவும் பதில் கருத்துகளையோ, தீர்வையோ சொல்லும். அப்படி ஏற்பட்ட நம்பிக்கையில் தான் என் தொழில்முறை சார்ந்த விஷயங்களிலும் (ChatGPT)சாட்ஜிபிடியை ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

கதை எழுதும்போது என் எண்ணங்களைச் சொல்வேன். (ChatGPT)சாட்ஜிபிடியும்  கதைமாந்தர்களுக்கு உரித்தான சில சிறந்த கதைக்களத்தைக் கூறும். அப்படித்தான் அந்த 5 சதவிகிதம் உள்ளடக்கத்தைத் தந்தது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் AI உதவியால் நாவல் எழுதிய ஒருவருக்கு விருது வழங்க வேண்டுமா என்று பெறும் சர்ச்சை வெடித்தது. அதற்கு விருது வழங்கும் தேர்வுக்குழுவின் உறுப்பினர் கெய்சிரோ ஹிரானோ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” (AI) செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்புகள் போட்டியில் பங்கேற்பது புதிதல்ல. கடந்த ஆண்டு சோனி வேர்ல்ட் புகைப்பட விருதுகளில் புகைப்படக் கலைஞர் போரிஸ் எல்டாக்சென், என்பவர் கிரியேட்டிவ் போட்டோ பிரிவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டோ உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதனால் அவர் அப்போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். (AI) செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எழுதுவதும் இதுபோன்று எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால் தற்போது சிக்கலை ஏற்படுத்தும் அளவுக்கு டோக்கியோ சிம்பதி டவரில் அப்படி எந்த விஷயமும் இல்லை.

புத்தகத்திலேயே AI குறிப்பிட்டதாகத்தான் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ரீ குடான் கூறியதை பலரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இது இந்நாட்டில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: chatgptjapanawardnovelAkutagawaauthor
ShareTweetSendShare
Previous Post

“ராஜமௌலி எனக்கு துரோணாச்சாரியார்!”

Next Post

முதல்வரிடம் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன் ? திருமாவளவனுக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை தட்டி தூக்கிய பாதுகாப்பு படை – பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

முதல்வர் திறக்கவுள்ள பள்ளிபாளையம் பாலம் – சேதம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம்!

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பெண்ணிடம் அத்துமீறி வசூல்!

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – மேலும் 2 பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் அசத்தல்!

குல்மார்க்கில் சுற்றுலா பயணிகளுடன் உரையாடி ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!

மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம்!

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னட மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தல்!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து – வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies