முதல்வரிடம் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன் ? திருமாவளவனுக்கு அண்ணாமலை கேள்வி!
Apr 29, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரிடம் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன் ? திருமாவளவனுக்கு அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்து விட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் திருமாவளவன் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளைப் போல, நடுநாடு என்றழைக்கப்பட்ட, தொன்மையான கலாச்சாரத்தை கொண்ட விழுப்புரம் மண்ணில், தமிழகத்தில் நேர்மையானதொரு அரசியல் மாற்றம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சாத்தியம் என்ற நம்பிக்கையோடு, பெரும் திரளெனக் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்தால் சிறப்புற்றது. சோழர்களின் குல குருக்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தது விழுப்புரம் மண்ணில் தான்.

விழுப்புரத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் இருக்கிறார்கள். இங்கே செய்யப்படும் எடைக் குறைந்த மூக்குத்திகள், நாடு முழுவதும் பிரபலம். இவர்களைப் போன்ற கைவினைக் கலைஞர்கள் பயன்பெறத்தான், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்துள்ளார். இதற்கு 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 3 லட்ச ரூபாய் வரை பிணையில்லாத கடன் வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு 34%. ஆனால், விழுப்புரத்தின் பங்கு வெறும் 2.6% மட்டுமே. தமிழகத்தில் மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசியிலிருந்து நான்காவது இடத்தில் விழுப்புரம் இருக்கிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன சகோதரர்கள் அதிகம் வாழும் பகுதியான விழுப்புரத்தை, இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளாக விழுப்புரத்தை வளர்ச்சியில் பின்தங்கியே வைத்திருப்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் கொள்கையா?

நேற்றைய தினம், திருச்சியில் விசிக கட்சி நடத்திய மாநாட்டில், வழக்கம் போல இஸ்ரேல், பாலஸ்தீனம், மணிப்பூர், இலங்கை என்று பிற நாடு, பிற மாநில பிரச்சினைகளையெல்லாம் பேசிவிட்டு, ஆளுநர் பதவியை ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்போம், GST வரியை எதிர்ப்போம் என்று தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.

தமிழக மக்களுக்காகப் பேசாமல், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களால் என்ன பயன்? வேங்கைவயல் சம்பவம் நடந்து 14 மாதங்கள் ஆகியும், இன்று வரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சாதிய ரீதியான வன்கொடுமைகள் பரவலாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்து விட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திருமாவளவன்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டு அமைச்சர்கள். ஒருவர் பொன்முடி. மற்றொருவர் செஞ்சி மஸ்தான். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அமைச்சர் பொன்முடி தற்போது துறையில்லாத அமைச்சராக இருக்கிறார். செஞ்சி மஸ்தான் உண்மையில் சாராயம் காய்ச்சுபவர் நலத்துறை அமைச்சராகத்தான் இருக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது மூன்று வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.

இன்னும் இரண்டு வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார்.  அமலாக்கத்துறை சோதனையில் ₹41.9 கோடி வங்கி வைப்புத் தொகை மற்றும் ஒரு இந்தோனேசிய நிறுவனத்தை, வெறும் ₹41.57 லட்சத்திற்கு வாங்கியதாகக் கணக்கு காட்டி, பின்னர் 2022 ஆம் ஆண்டு, ₹100 கோடிக்கு விற்கப்பட்டதிலும், ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தல், நேர்மையான நல்லாட்சிக்கும், குடும்ப ஊழல் ஆட்சிக்கும் இடையேயான தேர்தல். ஏழை எளிய மக்களுக்கான பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கும், காங்கிரஸ், திமுக ஊழல் கட்சிகளுக்கும் இடையேயான தேர்தல். தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக, குடும்ப அரசியல் ஒழிய, நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: vckthirumavalavanbjpannamalaien mann en makkalvilupuram
ShareTweetSendShare
Previous Post

AI உதவியால் எழுதிய நாவலுக்கு விருது !

Next Post

இன்று ஆளுநரை சந்திக்கிறார் நிதிஷ்குமார் : பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாக தகவல்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies