ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!
Jul 24, 2025, 01:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ஒதுக்கீடு வழக்கு, நில மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த இரு வழக்குகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சூழலில், நில மோசடி வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இதையடுத்து, 8-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் அனுப்பிய கடிதத்தில், “அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக முடியாத சூழலில் இருக்கிறேன். ஆகவே, எனது வீட்டில் வந்து விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த 20-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டுக்கு வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மற்றொரு சம்மனை அமலாக்கத்துறை அனுப்பியது.

அதில், மீண்டும் விசாரணை நடத்தவிருப்பதால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறியிருந்தது. எனினும், இந்த சம்மனுக்கும் பதிலளித்த ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக இயலாது. வேண்டுமானால் எனது வீட்டில் வந்து விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்எ ன்று கூறியிருந்தார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை அனுப்பிய பதில் கடிதத்தில், விசாரணைக்கு வரும் 29 அல்லது 31-ம் ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியை உறுதி செய்யுமாறும், அப்படி இல்லாவிட்டால், இரண்டு நாட்களில் ஏதோ ஒரு நாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வந்து விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து டெல்லியிலுள்ள தனது வீட்டிற்குச் சென்று விட்டார், இதையறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லியிலுள்ள ஹேமந்த் சோரனின் வீட்டுக்கு விசாரணைக்கு வந்திருக்கின்றனர். மேலும், டெல்லியிலுள்ள ஜார்க்கண்ட் பவனிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பா.ஜ.க. அலுவலகம் மற்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து, ஜாம்ஷெட்பூர், பலாமு மற்றும் கிரிதிஹ் ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த சோரனின் நிகழ்ச்சிகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Tags: delhiEnforcement DirectorateJharkhandCM Hemant Soren
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்.27-ல் தேர்தல் நடைபெறும்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து! – 2 பேர் பலி, 20 பேர் காயம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies