இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட நேர முடிவில் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 396 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜெஸ்வால் 209 ரன்களை எடுத்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாக் கிராலி 76 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குலதீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.அக்சார் படேல் 1 விக்கெட் எடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 28 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் மற்றும் ஜெய்ஷ்வால் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட நேர முடிவில் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது.