இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது! - குடியரசுத் தலைவர்
Oct 1, 2025, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது! – குடியரசுத் தலைவர்

Web Desk by Web Desk
Feb 9, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 9, 2024) கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர்,

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை அடைவதில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் இணையற்ற பங்களிப்பை செய்துள்ளது என்றார். இந்த நிறுவனம் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் திறமையாக மேற்கொண்டு வருவது மட்டுமின்றி, அத்தகைய ஆராய்ச்சிகள் களத்தில் சென்றடைவதையும் உறுதி செய்துள்ளது எனறு கூறினார்.

இந்த நிறுவனம் 200-க்கும் அதிகமான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 2005க்கும் 2020-க்கும் இடையே, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 100-க்கும் அதிகமான பயிர் வகைகளை உருவாக்கியுள்ளது. அதன் பெயரில் 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் அது கொண்டுள்ளது என்று  கூறினார்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் என்று கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.

எனவே, நமது பொருளாதாரத்தின் இந்த அடித்தளம் முடிந்தவரை வளர்வதையும், அதில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் உறுதி செய்வது மிகவும் முக்கியமாகும்.  விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், புதிய வேளாண் முறைகளை ஊக்குவிக்கவும், சுமூகமான பாசன முறையை ஏற்படுத்தவும் அரசு பணியாற்றி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வருமானப் பாதுகாப்பை வழங்குவதற்காக அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சனைகளை நாம் அனைவரும் அறிவோம் என்று கூறினார். நமது விவசாய சகோதர சகோதரிகளில் பலர் இன்னும் வறுமையில் வாழ்கின்றனர்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதையும், வறுமை வாழ்க்கையிலிருந்து வளமான வாழ்க்கையை நோக்கிச் செல்வதையும் உறுதி செய்வதில் நாம் அதிக வேகத்துடன் முன்னேற வேண்டும்.

2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும்போது, இந்திய விவசாயிகள் இந்தப் பயணத்தின் முன்னோடிகளாக இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

GST Refund தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அண்ணாமலை

Next Post

குடியரசுத் துணைத் தலைவர் மகாராஷ்டிரா பயணம்!  

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies