நிலக்கரியை வைரமாக மாற்றினோம்! - நிர்மலா சீதாராமன்
Aug 19, 2025, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலக்கரியை வைரமாக மாற்றினோம்! – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Feb 9, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

சர்வதேச பிரச்னைகளை காங்கிரஸ் கூட்டணி அரசை விட, தேஜ., கூட்டணி அரசு சிறப்பாக கையாண்டது. ஐக்கிய முற்போக்குகூட்டணிக்கு குடும்பமே பிரதானம். எங்களுக்கு தேசமே பிரதானம். கோவிட் காலத்தில் பிரதமர் மோடி முன்களத்தில் நின்று பணியாற்றினார். ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.

12 நாட்கள் நடந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடந்த ஊழலை உலக நாடுகள் அறியும். இந்த ஊழலால் ஒட்டு மொத்த தேசமும் வேதனை அடைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த காமன்வெல்த் போட்டி தோல்வியடைந்தது. ஆனால், ஜி20 மாநாடு வெற்றி பெற்றது.

ஐமுகூ., ஆட்சியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேட்டை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. முந்தைய ஆட்சியின் போது, குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்டது.

நிலக்கரி சுரங்கம் அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால், நிறுவனங்களால் மின்உற்பத்தி செய்ய முடியவில்லை. தேசம் இருளில் மூழ்கியது.
ஆனால், நாங்கள் பின்பக்க கதவு வழியாக எங்கள் உறவினர்கள் நிலக்கரி சுரங்க உரிமம் பெறுவதை தடுத்தோம். பா.ஜ., ஆட்சியில் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. நிலக்கரியை ஐமுகூ., அரசு சாம்பல் ஆக மாற்றியது. ஆனால், எங்களது கொள்கைகளால் நாங்கள் நிலக்கரியை வைரமாக மாற்றினோம் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும் போது பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 192%, நிதியுதவி 300%-ம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

“2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூ.94,977 கோடி வழங்கப்பட்டது, 2014 முதல் 2023 டிசம்பர் வரை பாஜக ஆட்சியில் ரூ.2.77 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது 192% அதிகம். எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை, நான் தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய முடியாது.” என கூறினார்.

இதே போன்று, “தமிழ்நாட்டிற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட நிதியை விட பாஜக ஆட்சியில் 300% அதிகம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி பகிர்வு தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் இருப்பதால், அனைவரும் பார்த்துக் கொள்ளலாம்” என்று விளக்கம் அளித்தார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

WWE ஜாம்பவானை கலாய்த்த கால்பந்து வீரர் ரொனால்டோ!

Next Post

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ரஷ்ய அதிபர் புடின் 

Related News

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies