நிலக்கரியை வைரமாக மாற்றினோம்! - நிர்மலா சீதாராமன்
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலக்கரியை வைரமாக மாற்றினோம்! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

சர்வதேச பிரச்னைகளை காங்கிரஸ் கூட்டணி அரசை விட, தேஜ., கூட்டணி அரசு சிறப்பாக கையாண்டது. ஐக்கிய முற்போக்குகூட்டணிக்கு குடும்பமே பிரதானம். எங்களுக்கு தேசமே பிரதானம். கோவிட் காலத்தில் பிரதமர் மோடி முன்களத்தில் நின்று பணியாற்றினார். ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.

12 நாட்கள் நடந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடந்த ஊழலை உலக நாடுகள் அறியும். இந்த ஊழலால் ஒட்டு மொத்த தேசமும் வேதனை அடைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த காமன்வெல்த் போட்டி தோல்வியடைந்தது. ஆனால், ஜி20 மாநாடு வெற்றி பெற்றது.

ஐமுகூ., ஆட்சியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேட்டை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. முந்தைய ஆட்சியின் போது, குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்டது.

நிலக்கரி சுரங்கம் அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால், நிறுவனங்களால் மின்உற்பத்தி செய்ய முடியவில்லை. தேசம் இருளில் மூழ்கியது.
ஆனால், நாங்கள் பின்பக்க கதவு வழியாக எங்கள் உறவினர்கள் நிலக்கரி சுரங்க உரிமம் பெறுவதை தடுத்தோம். பா.ஜ., ஆட்சியில் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. நிலக்கரியை ஐமுகூ., அரசு சாம்பல் ஆக மாற்றியது. ஆனால், எங்களது கொள்கைகளால் நாங்கள் நிலக்கரியை வைரமாக மாற்றினோம் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும் போது பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 192%, நிதியுதவி 300%-ம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

“2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூ.94,977 கோடி வழங்கப்பட்டது, 2014 முதல் 2023 டிசம்பர் வரை பாஜக ஆட்சியில் ரூ.2.77 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது 192% அதிகம். எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை, நான் தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய முடியாது.” என கூறினார்.

இதே போன்று, “தமிழ்நாட்டிற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட நிதியை விட பாஜக ஆட்சியில் 300% அதிகம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி பகிர்வு தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் இருப்பதால், அனைவரும் பார்த்துக் கொள்ளலாம்” என்று விளக்கம் அளித்தார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

WWE ஜாம்பவானை கலாய்த்த கால்பந்து வீரர் ரொனால்டோ!

Next Post

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ரஷ்ய அதிபர் புடின் 

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies