இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.
இ3தொடர்ந்து நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி 15 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி ராஞ்சியில் 4வது போட்டியும், மார்ச் 7 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் 5வது போட்டியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி :
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல். ராகுல், ரஜத் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜுரேல், கே.எஸ். பாரத், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.
இதில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்தால் மட்டுமே பிளேயிங் 11-ல் இடம்பெறுவார்கள் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அதேபோல் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடத விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். அதேபோல் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.