இந்தியாவின் 10 ஆண்டுகால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் : டாக்டர் ஜிதேந்திர சிங்
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் 10 ஆண்டுகால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் : டாக்டர் ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலவீனமான 5 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இருந்து பலமான “முதல் 5” நிலைக்கு முன்னேறிய இந்தியாவின் கடந்த பத்தாண்டு கால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை உற்சாகப்படுத்தும் என மத்தியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைஇணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் குழுமம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் மாற்றத்தின் சக்திகளை அளவிடுதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சி எந்தவொரு பொருளாதார மாணவரையும் உற்சாகப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த பத்து ஆண்டுகள்,  நம்பிக்கையை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். பல்வேறு உலகளாவிய குறியீடுகளில் இந்தியா விரைவான உயர்வைப் பதிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உலகளாவிய புதுமைக் கண்டுபிடிப்புக் குறியீட்டில் 2014-ம் ஆண்டில் நாம் 81-வது இடத்தில் இருந்ததாகவும் தற்போது 41 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தில்  உள்ளதாகவும் அவர் கூறினார். உலக அளவில் 3-வது பெரிய புத்தொழில் சூழல்  அமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விண்வெளி சீர்திருத்தங்கள் மூலம் பெரிய விண்வெளித் திட்டங்கள் சாத்தியமானது என்று அவர் கூறினார். கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளித் துறையில் ஒரே ஒரு புத்தொழில் நிறுவனம் மட்டுமே இருந்தது எனவும் தற்போது 190 தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டில் தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

7,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி கொண்ட இந்தியாவில், மிகப்பெரிய கடலோர செல்வ வளத்தைப் பயன்படுத்த ஆழ்கடல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் சிற்பிகளாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Tags: IndiaDr Jitendra SinghIndia's journey in the past decadeeconomic growth
ShareTweetSendShare
Previous Post

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு!

Next Post

உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியா – எத்தனை கோடி தெரியுமா?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies