இந்தியாவின் 10 ஆண்டுகால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் : டாக்டர் ஜிதேந்திர சிங்
Oct 26, 2025, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் 10 ஆண்டுகால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் : டாக்டர் ஜிதேந்திர சிங்

Web Desk by Web Desk
Feb 10, 2024, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலவீனமான 5 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இருந்து பலமான “முதல் 5” நிலைக்கு முன்னேறிய இந்தியாவின் கடந்த பத்தாண்டு கால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை உற்சாகப்படுத்தும் என மத்தியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைஇணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் குழுமம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் மாற்றத்தின் சக்திகளை அளவிடுதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சி எந்தவொரு பொருளாதார மாணவரையும் உற்சாகப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த பத்து ஆண்டுகள்,  நம்பிக்கையை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். பல்வேறு உலகளாவிய குறியீடுகளில் இந்தியா விரைவான உயர்வைப் பதிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உலகளாவிய புதுமைக் கண்டுபிடிப்புக் குறியீட்டில் 2014-ம் ஆண்டில் நாம் 81-வது இடத்தில் இருந்ததாகவும் தற்போது 41 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தில்  உள்ளதாகவும் அவர் கூறினார். உலக அளவில் 3-வது பெரிய புத்தொழில் சூழல்  அமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விண்வெளி சீர்திருத்தங்கள் மூலம் பெரிய விண்வெளித் திட்டங்கள் சாத்தியமானது என்று அவர் கூறினார். கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளித் துறையில் ஒரே ஒரு புத்தொழில் நிறுவனம் மட்டுமே இருந்தது எனவும் தற்போது 190 தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டில் தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

7,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி கொண்ட இந்தியாவில், மிகப்பெரிய கடலோர செல்வ வளத்தைப் பயன்படுத்த ஆழ்கடல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் சிற்பிகளாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Tags: IndiaDr Jitendra SinghIndia's journey in the past decadeeconomic growth
ShareTweetSendShare
Previous Post

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு!

Next Post

உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியா – எத்தனை கோடி தெரியுமா?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies