இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியதற்கு ஆர்.சி.பி. அணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது. இதைத்தொடர்ந்து நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி 15 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி ராஞ்சியில் 4வது போட்டியும், மார்ச் 7 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் 5வது போட்டியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இடம்பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது விராட் கோலி அணியில் இல்லாதது குறித்து ஆர்சிபி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “13 ஆண்டுகளில் விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர். தேசம் உங்களுடன் உள்ளது. நீங்கள் திரும்பத் தயாராகும் போதெல்லாம் உங்களுக்கான இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும், கிங்” என்று பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
The first Test series in 13 years without Virat Kohli. 🥺
The nation is with you, and your seat remains reserved whenever you’re ready to return, King. 👑❤️🔥#PlayBold #INDvENG #TeamIndia @imVkohli pic.twitter.com/fxOgLIlhWL
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 10, 2024