இனி சுற்றுலா செல்வோருக்கு கவலை இல்லை : பல்வேறு நாடுகளில் பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ சேவை!
Jul 23, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி சுற்றுலா செல்வோருக்கு கவலை இல்லை : பல்வேறு நாடுகளில் பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ சேவை!

Web Desk by Web Desk
Feb 13, 2024, 06:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ பணபரிவர்த்தனை தற்போது பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன.

2016-ம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. தற்போது இளைஞர்களை முதல் முதியவர்கள் வரை கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில் யுபிஐ பரிவர்த்தனை பிரதானமாக மாறியுள்ளது.

ரொக்கமாக பணம் கையில் இல்லாவிட்டாலும், செல்போன் இருந்தால் போதும். நாட்டின் எப்பகுதிக்கு சென்றாலும் பணபரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் டிஜிட்டல் புரட்சி என்று கூறலாம். பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடி, அபுதாபியில் UPI RuPay card பணப்பரிவர்த்தனையை தொடங்கி வைத்தார். இதேபோல், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.  மொரீஷியஸில் ரூபே கார்டு சேவையும் தொடங்கப்பட்டது.

கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை  அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள்,  அதற்கான கட்டணத்தை தங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே  செலுத்த முடியும். இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பாவில் உள்ள சுற்றுலா மையங்களில், இந்திய பயணிகளுக்கு பயன்படும் வகையில் யுபிஐபரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் UPI கட்டணத்தை ஏற்றுக்கொள்கின்றன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனி இந்த நாடுகளுக்குள் சுற்றுலா செல்வோருக்கு கவலையில்லை. யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்.

இதேபோல் கடந்த ஆண்டு ஜப்பானும் இந்தியாவின் UPI கட்டண முறைமையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், மேக் இன் இந்தியா போல், மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்பதைக் காட்டுகிறது என்றால் அது மிகையில்லை

Tags: PM ModiFranceIndiaupisingaporeuaeupi paymentssrilnaka
ShareTweetSendShare
Previous Post

2,000 பயணிகளுடன் கோவா – அயோத்தி ஆஸ்தா சிறப்பு ரயில் சேவை துவக்கம்!

Next Post

ஐசிசி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் யார்?

Related News

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies