ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நான் சந்திக்கும் போதெல்லாம், ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்களின் முக்கிய பங்கை அவர் பாராட்டுவார் என்று ‘அஹ்லான் மோடி’ நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி, சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் கலந்துக் கொள்ளும் ‘அஹ்லான் மோடி’ (வணக்கம் மோடி) என்ற தலைப்பில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரத பிரதமர் மோடியைக் காண ஏராளமான இந்திய வம்சாவளியினர் இந்த மைதானத்திற்கு வந்தனர்.


பிரதமர் மோடி மைதானத்திற்குள் நுழைந்த போது, இந்திய வம்சாவளியினர் மோடி, மோடி என உற்சாகமாக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, “ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் உங்கள் அனைவரின் மீதும் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நான் கொரோனா தொற்றுநோய் பரவலின்போது, பார்த்தேன். கொரோனா பரவலின் போது, அமீரகத்தில் உள்ள இந்தியர்களை நாங்கள் மீட்டெடுக்க முயற்சி செய்கிறோம் என்று நான் சொன்னபோது, அவர் என்னைக் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அவர் அனைத்து மக்களையும் நன்றாக கவனித்துக் கொண்டு, தடுப்பூசிகளுக்கான ஏற்பாடுகளையும் செய்தார். இதன்மூலம், என் கவலையைப் போக்கினார்.

கடந்த மாதம், ஐக்கிய அரபு அமீரக அதிபர் குஜராத்துக்கு வந்தார். அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களை கவனித்துக் கொண்ட விதத்திற்காக பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத்தை நான் சந்திக்கும் போதெல்லாம், அவர் உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கை அவர் பாராட்டுகிறார். இந்த சயீத் மைதானத்தில் கூட, இந்தியர்களின் வியர்வையை உணர முடியும் என்று கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்!

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல்! – தந்தை எழுதிய சுயசரிதையை மு.க. ஸ்டாலின் படிக்கவில்லை! – அண்ணாமலை

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies