டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன்! - அமலாக்கத் துறை
Jul 4, 2025, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன்! – அமலாக்கத் துறை

Web Desk by Web Desk
Feb 14, 2024, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் ஆறாவது சம்மன் அனுப்பியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான கொள்கை முடிவுகளில் தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் அரசு செயல்பட்டதாகவும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 5 முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.

கடைசியாக பிப்ரவரி 5ஆம் தேதி மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இருப்பினும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்தார். இதற்கு முன் கடந்த ஜனவரி 18ஆம் தேதி மற்றும் அதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜனவரி 3, நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21ஆம் தேதி ஆகிய தேதிகளிலும் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இருப்பினும் தொடர்ச்சியாக அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் அளித்து உள்ளனர். பண மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணித்து வருவதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவை விசாரணைக்கு எற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தனர். பிப்ரவரி 7 வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து தெரிவிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்நிலையில் 5 முறை சம்மன் அனுப்பி கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்த நிலையில், தற்போது அவருக்கு 6-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Tags: EdEnforcement departmentaravind kejriwal
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடைக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு – மீண்டும் நாளை விசாரணை!

Related News

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies