இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! - குடியரசுத் தலைவர்
Sep 10, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! – குடியரசுத் தலைவர்

Web Desk by Web Desk
Feb 15, 2024, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பெனேஷ்வர் கோவிலில் நேற்று பிப்ரவரி 14, 2024 ராஜஸ்தானின் பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். ஒவ்வொரு துறையும் தற்சார்புடன் இருந்தால் மட்டுமே இந்தியா தற்சார்புடன் இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

சுய உதவிக் குழுக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அனைவரையும் தற்சார்பை ஊக்குவிப்பதற்காக அவர் பாராட்டினார். சுய உதவிக் குழுக்கள் பணிச்சூழல் வளத்தை அளிப்பது மட்டுமின்றி, மனித வளம் மற்றும் சமூக வளத்தை உருவாக்குவதில் பாராட்டத்தக்க பணியையும் செய்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பழங்குடியின சமுதாயத்திலிருந்து சமூகத்தின் மற்ற பிரிவினரும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பழங்குடியின சமூகங்கள் தற்சார்பு நிர்வாகத்திற்கு நல்ல உதாரணங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இயற்கையோடு இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று கூறினார். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல், குறைந்தபட்ச வளங்களுடன் வாழ நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும்,  மகளிருக்கு அதிகாரமளித்தல் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற சிந்தனையை நடைமுறைப்படுத்த ஒட்டுமொத்த சமூகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பெண்கள் மத்தியில் கல்வி, திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறிய அவர், இதனால், பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திலும், உலக முன்னேற்றத்திலும் சம பங்காளிகளாக மாற முடியும் என்று தெரிவித்தார்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார். அவர்களின் வெற்றியின் வலிமையில்தான் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை : விசாரணை குழுவை அமைத்தது பாஜக! 

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.73 அடியாக குறைந்தது!

Related News

தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies