இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! - குடியரசுத் தலைவர்
Aug 10, 2026, 11:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 11:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பெனேஷ்வர் கோவிலில் நேற்று பிப்ரவரி 14, 2024 ராஜஸ்தானின் பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். ஒவ்வொரு துறையும் தற்சார்புடன் இருந்தால் மட்டுமே இந்தியா தற்சார்புடன் இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

சுய உதவிக் குழுக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அனைவரையும் தற்சார்பை ஊக்குவிப்பதற்காக அவர் பாராட்டினார். சுய உதவிக் குழுக்கள் பணிச்சூழல் வளத்தை அளிப்பது மட்டுமின்றி, மனித வளம் மற்றும் சமூக வளத்தை உருவாக்குவதில் பாராட்டத்தக்க பணியையும் செய்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பழங்குடியின சமுதாயத்திலிருந்து சமூகத்தின் மற்ற பிரிவினரும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பழங்குடியின சமூகங்கள் தற்சார்பு நிர்வாகத்திற்கு நல்ல உதாரணங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இயற்கையோடு இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று கூறினார். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல், குறைந்தபட்ச வளங்களுடன் வாழ நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும்,  மகளிருக்கு அதிகாரமளித்தல் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற சிந்தனையை நடைமுறைப்படுத்த ஒட்டுமொத்த சமூகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பெண்கள் மத்தியில் கல்வி, திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறிய அவர், இதனால், பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திலும், உலக முன்னேற்றத்திலும் சம பங்காளிகளாக மாற முடியும் என்று தெரிவித்தார்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார். அவர்களின் வெற்றியின் வலிமையில்தான் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Tags: President Draupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை : விசாரணை குழுவை அமைத்தது பாஜக! 

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.73 அடியாக குறைந்தது!

Related News

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies