செந்தில் பாலாஜி வழக்கு - திடீர் திருப்பம்!
Jan 14, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு – திடீர் திருப்பம்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2011 – 2015-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்ட விரோதமாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், கடந்த ஜூன் 14 -ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதனால், அவரது தம்பி அசோக் குமார் தலைமறைவானார்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதி மன்றத்தில் தனக்கு ஜாமீன் கிடைக்கும் எனக் கருதி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்றும் அது தொடர்பான விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், 30 -வழக்குகளில் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்பமுடியாது என அமலாக்கத்துறை தனது வாதத்தை முன்வைத்தது.

செந்தில் பாலாஜி தரப்பின் கருத்தை தெரிவிக்க விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (பிப்.19) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்.

இதனிடையே, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக்கோரிய மனுவை, தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து, நாளை, அதாவது 16-ம் தேதி குற்றச்சாட்டை பதிவு செய்ய செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி : பரூக் அப்துல்லா அறிவிப்பு!!

Next Post

50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது! – பியூஷ் கோயல்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies