செந்தில் பாலாஜி வழக்கு - திடீர் திருப்பம்!
Oct 28, 2025, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு – திடீர் திருப்பம்!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2011 – 2015-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்ட விரோதமாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், கடந்த ஜூன் 14 -ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதனால், அவரது தம்பி அசோக் குமார் தலைமறைவானார்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதி மன்றத்தில் தனக்கு ஜாமீன் கிடைக்கும் எனக் கருதி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்றும் அது தொடர்பான விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், 30 -வழக்குகளில் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்பமுடியாது என அமலாக்கத்துறை தனது வாதத்தை முன்வைத்தது.

செந்தில் பாலாஜி தரப்பின் கருத்தை தெரிவிக்க விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (பிப்.19) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்.

இதனிடையே, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக்கோரிய மனுவை, தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து, நாளை, அதாவது 16-ம் தேதி குற்றச்சாட்டை பதிவு செய்ய செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி : பரூக் அப்துல்லா அறிவிப்பு!!

Next Post

50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது! – பியூஷ் கோயல்

Related News

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies