50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது! - பியூஷ் கோயல்
Sep 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது! – பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 06:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெரிய உற்பத்தியாளர்களாக செயல்பட்டு, விவசாயிகள் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்கிறார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேளாண் பொருட்களின் உற்பத்தி மற்றும் தரம் உயர்ந்து வருவதற்கும், 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு நிறுவனமான இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் உலகளாவிய பருப்பு கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பியூஷ் கோயல்,

இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதற்கும், உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெரிய உற்பத்தியாளராக நாட்டை உருவாக்குவதற்கும் இந்திய விவசாயிகள் பெரிய பங்களிப்பை ஆற்றி வருவதாக அவர் கூறினார்.

இது பல்வேறு உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் தரம் இரண்டிலும்  மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது என்று குறிப்பிட்டார். 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளின் அர்ப்பணிப்பு மற்றும் திறன்கள் காரணமாக, பருப்பு வகைகள் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டின் 171 லட்சம் டன்னிலிருந்து 2024-ல் 270 லட்சம் டன்னாக பருப்பு உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

பாரத் பிராண்ட் குறித்து பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், மக்களுக்கு நியாயமான விலையில் பருப்பு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்று கூறினார்.

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ந்த நாடுகள் உட்பட பல நாடுகளைத் தாக்கிய உணவுப் பணவீக்கத்திலிருந்து நுகர்வோரை இந்தியா பாதுகாத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  இந்தியா மிகக் குறைந்த பணவீக்க விகிதங்களைக் கொண்ட சிறந்த நாடாக உள்ளது என்று அவர் கூறினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை இன்று நமது விவசாயிகளுக்கு உண்மையான உற்பத்திச் செலவைவிட 50 சதவீத விலை கிடைப்பதை உறுதி செய்கிறது என்றும், அதன் மூலம் வருமானத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்தியா உலகின் மிகப்பெரிய சிறுதானிய உற்பத்தியாளராகவும், 5 வது பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது என்றும், சிறுதானியங்களைப் போலவே பருப்பு வகைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

 

Tags: piyush goyal
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கு – திடீர் திருப்பம்!

Next Post

குளிர்கால விளையாட்டு போட்டிகள் 2024!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies