செந்தில் பாலாஜி வழக்கு - திடீர் திருப்பம்!
Jul 31, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு – திடீர் திருப்பம்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2011 – 2015-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்ட விரோதமாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், கடந்த ஜூன் 14 -ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதனால், அவரது தம்பி அசோக் குமார் தலைமறைவானார்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதி மன்றத்தில் தனக்கு ஜாமீன் கிடைக்கும் எனக் கருதி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்றும் அது தொடர்பான விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், 30 -வழக்குகளில் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்பமுடியாது என அமலாக்கத்துறை தனது வாதத்தை முன்வைத்தது.

செந்தில் பாலாஜி தரப்பின் கருத்தை தெரிவிக்க விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (பிப்.19) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்.

இதனிடையே, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக்கோரிய மனுவை, தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து, நாளை, அதாவது 16-ம் தேதி குற்றச்சாட்டை பதிவு செய்ய செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி : பரூக் அப்துல்லா அறிவிப்பு!!

Next Post

50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது! – பியூஷ் கோயல்

Related News

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies