தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது! - குடியரசுத் துணைத் தலைவர்
Jun 6, 2025, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது! – குடியரசுத் துணைத் தலைவர்

Web Desk by Web Desk
Feb 17, 2024, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் எம்எஸ்எம்இ-களின் பங்கு உள்ளது எனக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் புத்தொழில் நிறுவனம் மற்றும் எம்எஸ்எம்இ உச்சிமாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், 

மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினரைத் தாயகமாகக் கொண்ட இந்தியா, ஜனநாயகத்தின் தாய், பழமையான ஜனநாயகம், துடிப்பான ஜனநாயகம், செயல்பாட்டு ஜனநாயகமாகும். ஜனநாயக நடைமுறை மூலம்  திரௌபதி முர்மு நாட்டின் முதல் குடிமகளாக இருப்பது நமது அதிர்ஷ்டம் ஆகும்.

நமது பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்தில் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ஒரு பெரிய மாற்றம், ஒரு இனிமையான மாற்றம். நல்ல காரணிக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை செய்துள்ளன.

இதன் விளைவாக நாம் ஏற்கனவே 5-வது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம். அடுத்த 2-3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் நாம் முன்னே சென்று கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய ஆண்டுகளில், வெற்றிகரமான புத்தொழில் நிறுவனங்கள் சூழல் அமைப்பு மற்றும் ஏராளமான வெற்றிகரமான முயற்சிகள் காரணமாக புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

துடிப்பான எம்.எஸ்.எம்.இ துறையின் மூலம் உள்நாட்டில் வேரூன்றி வரும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.

இந்தியாவில்  30 சதவீத எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் எம்எஸ்எம்இ-களின் பங்காகும். இவை 11 கோடிக்கும் அதிகமான தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

மிக முக்கியமாக, இது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் சிறந்த அறிவை உருவாக்கும் ஒரு பகுதியாகும். உறுதியான ஆளுகை, எளிதான வர்த்தகக் கொள்கைகள், முன்முயற்சிகள் ஆகியவை தொழில்முனைவு மற்றும் புதுமை உணர்வு ஆகியவற்றின் செழிப்புக்கு உதவியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Vice President Jagdeep Dhankar
ShareTweetSendShare
Previous Post

இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல்!

Next Post

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி!

Related News

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

ரெப்போ கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாக குறைத்து ஆர்பிஐ அறிவிப்பு!

வானதி சீனிவாசன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் தலைமைக்கு சசி தரூர் கேள்வி!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் – ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை!

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்சுடன் ஒப்பந்தம்!

தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? – அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!

ஜம்மு – காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41-வது ஆண்டு நிறைவு – பொற்கோயில் அருகே பாதுகாப்பு அதிகரிப்பு!

கொச்சி அருகே மூழ்கிய கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியீடு!

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயற்சி – கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் அபிஷேகம் செய்த விவகாரம் – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies