நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் : பிரதமர் மோடி
Aug 18, 2025, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Feb 19, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மற்றொரு புனித ஸ்தலத்திற்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. இப்போது உங்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்டமான கல்கி தாம் கோயிலுக்கு  அடிக்கல் நாட்டும் பாக்கியம் கிடைத்துள்ளது. இந்திய நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் என்று  நம்புகிறேன் என தெரிவித்தார்.

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு புதிய பயணம் தொடங்கும் என்றும், கல்கிதான் அதன் போக்கை நிர்ணயிக்கும் என்றும் கூறினார்.

ஜனவரி 22 முதல் ஒரு புதிய காலம் தொடங்கியுள்ளது. பகவான் ஸ்ரீ ராமர் ஆண்டபோது, அவரது செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல், ராம் லல்லாவின் அரியணை மூலம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு ஒரு புதிய பயணம் தொடங்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராமரைப் போலவே, கல்கியின் அவதாரமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கும். கல்கி காலத்தின் சுழற்சியில் மாற்றத்தைத் தொடங்குபவர் என்றும் மோடி தெரிவித்தார்.

தோல்வியில் இருந்து வெற்றியை மீட்டெடுக்கும் தேசம் இந்தியா. பலநூறு ஆண்டுகளாக நாம் தாக்கப்பட்டோம். வேறு எந்த நாடாக இருந்தாலும், வேறு எந்த சமுதாயமாக இருந்தாலும், தொடர்ச்சியான தாக்குதல்களால் அது அழிந்திருக்கும். ஆனாலும் நாம் வலுவாக நிற்கிறோம்.

சிலர் எனக்காக மட்டுமே விட்டுச் சென்ற பல நல்ல பணிகள் உள்ளன. எதிர்காலத்தில் எந்த நல்ல பணி மிச்சமிருந்தாலும், மகான்கள் மற்றும் மக்களின் ஆசியுடன் அதை முடிப்போம்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இன்று ஒருபுறம் நமது புனித யாத்திரை தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, மறுபுறம் ஹைடெக் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. இன்று கோவில்கள் கட்டப்படும் அதேவேளையில், நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன எனறும் மோடி குறிப்பிட்டார்.

இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாள். எனவே இந்த நாள் இன்னும்  புனிதமானதாகவும், ஊக்கமளிக்கும் நாளாகவும் மாறுகிறது. இன்று, நாட்டில் நாம் காணும் கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் நம் அடையாளத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்,

இந்த உத்வேகம் சத்ரபதி சிவாஜி மகாராஜிடமிருந்து மட்டுமே நமக்கு கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலடியில் எனது மரியாதையை செலுத்துகிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Narendra ModiModiprime ministerShri Kalki Dham
ShareTweetSendShare
Previous Post

வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

புதுமை கண்டுபிடிப்புகள் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies