இந்தியா, கிரீஸ், வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புதல்!
Jul 26, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, கிரீஸ், வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புதல்!

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் பிரதமர் மோடி உடன்  கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவிற்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் பிரதமர்  மிட்சோடாகிஸ் நேற்று இரவு புதுதில்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தகக் குழு ஒன்றும் வந்துள்ளது.

புதுதில்லியில் இன்று முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் 9வது ரைசினா உரையாடலில் மிட்சோடாகிஸ் தலைமை விருந்தினராகவும், முக்கியப் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்க்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

முன்னதாக டெல்லியில் உள்ள  மகாத்மா காந்தி நினைவுமண்டபத்தில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் அவரது மனைவி மரேவா கிராபோவ்ஸ்கி-மிட்சோடாகிஸ் ஆகியோர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசும் டெல்லியில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர்  மோடி,

இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். விவசாயம், மருந்து, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், திறன் போன்ற புதிய வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் இடம் குறித்துஇந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டன எனத் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்தும், இணைப்பும் தான் அதிக முன்னுரிமை அளிக்கும் பகுதிகள். தற்காப்பு கூட்டு உற்பத்தி மற்றும் உற்பத்தி இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் என்று அவர் கூறினார்.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்,

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ந்து மேம்படுத்தவும், அதை மூலோபாய நிலைக்கு மேம்படுத்தவும் இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன எனத் தெரிவித்தார். விவசாயம், சுற்றுலா மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பேசியதாக கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

எப்புடி? – ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS

Next Post

சென்னை மக்களே உஷார்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies