இண்டி கூட்டடணி என்பது ஊழல் கூட்டணி என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜகவை பார்க்கிறோம், எங்கள் பொறுப்பும் அதிகரித்துள்ளது. நாங்கள் வந்துள்ளோம் என்று சொல்வது முக்கியம். இருளில் இருந்து ஒளியை அடைந்துளோம்.
ஒரு காலத்தில் மாநிலத்தில் 5 முதல் 6 அரசுகளை அமைத்து திருப்தி அடைந்தோம்.இன்று 17 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. 10 ஆண்டுகளுக்குள் பிரதமர் மோடி அரசியலின் வரையறையை மாற்றினார்.முன்னதாக ஏழைகள் ஏமாற்றப்பட்டதாகவும், ஆனால் இன்று மோடி அரசாங்கம் ஏழைகளுக்கு பலம் அளித்து பெண்களுக்கு அதிகாரம் அளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தையும் அவர் விமர்சித்தார். உத்தவ் தாக்கரே ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளையும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகாராஷ்டிராவில் ஊழல் நடந்ததா இல்லையா? உத்தவ் ஆட்சியில் ஊழல் நடந்ததா இல்லையா? மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் சிறையில் இருந்தாரா இல்லையா? டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையை கண்டு ஏன் பயப்படுகிறார் என்றும் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பினார். மொத்தத்தில் இண்டி கூட்டணி ஊழல் கூட்டணி என்றும் அவர் கூறினார்.