சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 04:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12 ஆம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த இரண்டு சிங்கத்தில் ஏழு வயதுடைய ஆண் சிங்கத்திற்கு அக்பார் என்று பெயரும், ஆறு வயது பெண் சிங்கத்திற்கு சீதா என்ற பெயரும் சூட்டப்பட்டது.

ஹிந்து தெய்வமாக போற்றப்படும் சீதை என்ற பெயருடைய சிங்கத்துடன் முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் என்ற பெயருடைய சிங்கத்தை ஒன்றாக வைக்கப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்றும் சீதை என்ற சிங்கத்திற்கு பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல” என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் இந்துக் கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்தது.

இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, சீதா என்ற பெயரை அன்பினால் வைத்திருக்கலாம். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். பெயர் வைப்பது என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என்று தெரிவித்தார்.

நீதிபதியின் கருத்துக்கு பதில் சொன்ன விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பு, சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள் என்று விட்டுவிட்டால், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். மனதை புண்படுத்தும் இதுபோன்ற விஷயங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் வாதிட்டது.

‘சங்கீர் கோஜோ அஸ்தர் சீதா’ அதாவது கூட்டாளியை தேடி அலையும் அமைதியற்ற சிங்கம் என்ற தலைப்பின் கீழ் உத்தரபங்கா சம்பத் (Uttar Banga Sambad) என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருந்தது.

தற்செயலாகவே சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சீதா, அக்பரை தேடி அலைகிறாள் என்ற பொருள் தரும் கட்டுரை மனதை புண்படுத்துவதாக விஷவ ஹிந்து பரிஷத் சுட்டிக்காட்டியது.

வழக்கு விசாரணையின் இறுதியில், உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதி, சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

Tags: high courtThe court order to change the name of the lions!
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கெதிரான பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

நெல்லை-மேலப்பாளையம் இடையே பராமரிப்புப் பணி: ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies