சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!
Oct 29, 2025, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Feb 22, 2024, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12 ஆம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த இரண்டு சிங்கத்தில் ஏழு வயதுடைய ஆண் சிங்கத்திற்கு அக்பார் என்று பெயரும், ஆறு வயது பெண் சிங்கத்திற்கு சீதா என்ற பெயரும் சூட்டப்பட்டது.

ஹிந்து தெய்வமாக போற்றப்படும் சீதை என்ற பெயருடைய சிங்கத்துடன் முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் என்ற பெயருடைய சிங்கத்தை ஒன்றாக வைக்கப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்றும் சீதை என்ற சிங்கத்திற்கு பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல” என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் இந்துக் கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்தது.

இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, சீதா என்ற பெயரை அன்பினால் வைத்திருக்கலாம். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். பெயர் வைப்பது என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என்று தெரிவித்தார்.

நீதிபதியின் கருத்துக்கு பதில் சொன்ன விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பு, சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள் என்று விட்டுவிட்டால், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். மனதை புண்படுத்தும் இதுபோன்ற விஷயங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் வாதிட்டது.

‘சங்கீர் கோஜோ அஸ்தர் சீதா’ அதாவது கூட்டாளியை தேடி அலையும் அமைதியற்ற சிங்கம் என்ற தலைப்பின் கீழ் உத்தரபங்கா சம்பத் (Uttar Banga Sambad) என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருந்தது.

தற்செயலாகவே சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சீதா, அக்பரை தேடி அலைகிறாள் என்ற பொருள் தரும் கட்டுரை மனதை புண்படுத்துவதாக விஷவ ஹிந்து பரிஷத் சுட்டிக்காட்டியது.

வழக்கு விசாரணையின் இறுதியில், உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதி, சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

Tags: high courtThe court order to change the name of the lions!
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கெதிரான பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

நெல்லை-மேலப்பாளையம் இடையே பராமரிப்புப் பணி: ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies