சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!
Jul 29, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12 ஆம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த இரண்டு சிங்கத்தில் ஏழு வயதுடைய ஆண் சிங்கத்திற்கு அக்பார் என்று பெயரும், ஆறு வயது பெண் சிங்கத்திற்கு சீதா என்ற பெயரும் சூட்டப்பட்டது.

ஹிந்து தெய்வமாக போற்றப்படும் சீதை என்ற பெயருடைய சிங்கத்துடன் முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் என்ற பெயருடைய சிங்கத்தை ஒன்றாக வைக்கப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்றும் சீதை என்ற சிங்கத்திற்கு பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல” என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் இந்துக் கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்தது.

இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, சீதா என்ற பெயரை அன்பினால் வைத்திருக்கலாம். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். பெயர் வைப்பது என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என்று தெரிவித்தார்.

நீதிபதியின் கருத்துக்கு பதில் சொன்ன விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பு, சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள் என்று விட்டுவிட்டால், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். மனதை புண்படுத்தும் இதுபோன்ற விஷயங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் வாதிட்டது.

‘சங்கீர் கோஜோ அஸ்தர் சீதா’ அதாவது கூட்டாளியை தேடி அலையும் அமைதியற்ற சிங்கம் என்ற தலைப்பின் கீழ் உத்தரபங்கா சம்பத் (Uttar Banga Sambad) என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருந்தது.

தற்செயலாகவே சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சீதா, அக்பரை தேடி அலைகிறாள் என்ற பொருள் தரும் கட்டுரை மனதை புண்படுத்துவதாக விஷவ ஹிந்து பரிஷத் சுட்டிக்காட்டியது.

வழக்கு விசாரணையின் இறுதியில், உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதி, சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

Tags: high courtThe court order to change the name of the lions!
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கெதிரான பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

நெல்லை-மேலப்பாளையம் இடையே பராமரிப்புப் பணி: ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies