உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் : 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
Aug 21, 2025, 09:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் : 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 23, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

11 மாநிலங்களின் 11 PACS இல் ‘கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்’ முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் 24ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டுறவு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

11 மாநிலங்களின் 11 முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) செய்யப்படும் ‘கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்’ என்ற முன்னோடித் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் உள்ள 18,000 பிஏசிஎஸ்களில் கணினிமயமாக்கலுக்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்த முயற்சியானது நபார்டு மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC) தலைமையிலான கூட்டு முயற்சியுடன், உணவு தானிய விநியோகச் சங்கிலியுடன் PACS குடோன்களை தடையின்றி ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியானது, விவசாய உள்கட்டமைப்பு நிதி (AIF), வேளாண்மை சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு (AMI) போன்ற பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

2,500 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் இந்த  திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது அனைத்து செயல்பாட்டு PACS களையும் ஒரு ஒருங்கிணைந்த நிறுவன வள திட்டமிடல் (ERP) அடிப்படையிலான தேசிய மென்பொருளுக்கு மாற்றுவதை உள்ளடக்கியது. இது தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்கிறது.

மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த PACS ஐ NABARD உடன் இணைப்பதன் மூலம், PACS இன் செயல்பாட்டு திறன் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைகின்றனர்.

NABARD இந்த திட்டத்திற்காக தேசிய அளவிலான பொதுவான மென்பொருளை உருவாக்கியுள்ளது, இது நாடு முழுவதும் உள்ள PACS இன் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: delhiWorld's Largest Grain Storage Plan in Cooperative Sectorpm omdi
ShareTweetSendShare
Previous Post

பெண்களுக்கு கண்ணியமான, எளிதான வாழ்க்கையை மோடி அரசு உறுதி செய்துள்ளது! – ஜிதேந்திர சிங்

Next Post

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் : 3-வது இடத்தில் பாரதம்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies