உயர்தர சிகிச்சை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருகிறது! - மன்சுக் மாண்டவியா
Jul 7, 2025, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயர்தர சிகிச்சை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருகிறது! – மன்சுக் மாண்டவியா

Web Desk by Web Desk
Feb 23, 2024, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கதிர்வீச்சு புற்றுநோயியல், 128 ஸ்லைஸ் சி.டி ஸ்கேனர் மற்றும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) ஆலை உள்ளிட்ட புதிய சுகாதார வசதிகளை இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்  அனுராக் தாக்கூர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விஷ்ரம் சதன் என்ற இரவு தங்குமிடம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய மாநுலங்களவை உறுப்பினர் ஜே பி நட்டா,

எய்ம்ஸ் மருத்துவமனைகளை அதிகரித்தல், மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்குதல், எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை இடங்களை அதிகரித்தல் போன்ற  நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது என்றார்.

உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தகுதிவாய்ந்த அனைத்து மக்களும் தற்போது முழுமையாகக் காப்பீடு பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

பிலாஸ்பூரில் சுகாதாரத் துறை தொடர்பான 12 புதிய திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன  என்று கூறினார். இந்த மத்திய அரசு சவால்களை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார உள்கட்டமைப்புகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.  சுகாதார அவசர நிலைகளைக் கையாள அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

உயர்தர சுகாதார சேவைகளை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும், அந்த முயற்சியைத் தொடரும் வகையில், நாடு முழுவதும் பல புதிய மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும்  கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தரமான சுகாதார உள்கட்டமைப்பை கடைசி மைல் வரை கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சியில் இன்றைய திட்டங்களின் தொடக்கம் மற்றொரு மைல்கல் என்று கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள இரவு நேர தங்குமிட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தபின் இதன் மூலம், தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

 

Tags: jp naddaMinister Anurag Thakurbjp nadda
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : முதல் நாள் முடிவு!

Next Post

அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து – உயிர் தப்பிய 44 பயணிகள்!

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies