உயர்தர சிகிச்சை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருகிறது! - மன்சுக் மாண்டவியா
Sep 12, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயர்தர சிகிச்சை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருகிறது! – மன்சுக் மாண்டவியா

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 05:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கதிர்வீச்சு புற்றுநோயியல், 128 ஸ்லைஸ் சி.டி ஸ்கேனர் மற்றும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) ஆலை உள்ளிட்ட புதிய சுகாதார வசதிகளை இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்  அனுராக் தாக்கூர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விஷ்ரம் சதன் என்ற இரவு தங்குமிடம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய மாநுலங்களவை உறுப்பினர் ஜே பி நட்டா,

எய்ம்ஸ் மருத்துவமனைகளை அதிகரித்தல், மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்குதல், எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை இடங்களை அதிகரித்தல் போன்ற  நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது என்றார்.

உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தகுதிவாய்ந்த அனைத்து மக்களும் தற்போது முழுமையாகக் காப்பீடு பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

பிலாஸ்பூரில் சுகாதாரத் துறை தொடர்பான 12 புதிய திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன  என்று கூறினார். இந்த மத்திய அரசு சவால்களை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார உள்கட்டமைப்புகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.  சுகாதார அவசர நிலைகளைக் கையாள அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

உயர்தர சுகாதார சேவைகளை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும், அந்த முயற்சியைத் தொடரும் வகையில், நாடு முழுவதும் பல புதிய மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும்  கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தரமான சுகாதார உள்கட்டமைப்பை கடைசி மைல் வரை கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சியில் இன்றைய திட்டங்களின் தொடக்கம் மற்றொரு மைல்கல் என்று கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள இரவு நேர தங்குமிட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தபின் இதன் மூலம், தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

 

Tags: jp naddaMinister Anurag Thakurbjp nadda
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : முதல் நாள் முடிவு!

Next Post

அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து – உயிர் தப்பிய 44 பயணிகள்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies