நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய பத்திரிகையாளர் ஃபாசில் கான் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் Harlem பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த 27 வயதான ஃபாசில் கான் என்ற இளைஞர் உயிரிழந்தார். சார்ஜிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீயே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஃபாசில் கான் 2020 ஆம் ஆண்டு நியூயார்க்கு சென்றுள்ளார். நியூயார்க்கிற்குச் செல்வதற்கு முன்பு டெல்லியில் உள்ள CNN-News18 இல் நிருபராகப் பணிபுரிந்தார்.
மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழாளர் பட்டம் பெற்றார். இந்தியாவை சேர்ந்த இளைஞர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.