2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பாதையில், நாட்டை அழைத்துச் செல்வதற்கான அடித்தளத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் அரசு அமைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார்.
“வளர்ச்சியடைந்த பாரதம் 2047: வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் தொழில்துறை” என்ற தலைப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, வரி செலுத்துவோருக்கு முதலில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, நேர்மையாக வரி செலுத்துவோர் காரணமாகவே அரசு இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் சமூகத் துறைக்கு செலவிட முடிந்தது என்று கூறினார்.
முன்பெல்லாம் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே உரிய பயனாளிகளைச் சென்றடைந்து வந்தது. ஆனால், இன்று விடுவிக்கப்பட்ட பணம் அனைத்தும் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது.
தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அரசின் உறுதிப்பாட்டிற்கு யுபிஐ ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. யுபிஐ தொடங்கப்பட்டபோது அதன் செயல்திறன் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தாலும், தற்போது யுபிஐ சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவியுள்ளது.
இன்று உலகில் உள்ள அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும், 46 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. நமது தொழில்நுட்ப வலிமைக்காக உலகம் நம்மை எதிர்பார்க்கிறது.
உள்நாட்டு தொழில்கள் இன்று அரசு ஆதரவுடன் விரைவாக வளர்ந்து வருகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் நாட்டை அழைத்துச் செல்வதற்கான அடித்தளத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் அரசு அமைத்துள்ளது.