ஜார்கண்டில் ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஜார்கண்ட் மாநில சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயான லிமிடெட் நிறுவனத்தின் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த ஆலை ஆண்டுக்கு சுமார் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தியை செய்யும் திறன் கொணடது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் கோரக்பூரிலும், 2022ஆம் ஆண்டு நவம்பரில் உர ஆலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது உர ஆலை திறக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜார்கண்டில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில், மின்சாரம் மற்றும் நிலக்கரி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பரிசாக கிடைத்துள்ளது. சிந்த்ரி உர ஆலையை புத்துயிர் பெறும் என்று மோடி அளித்த உத்தரவாதம் இன்று நிறைவேறியுள்ளது.இந்தியாவின் யூரியா உற்பத்தி, 2014ல் 225 லட்சம் டன்னாக இருந்த நிலையில், தற்போது 310 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் யூரியாவில் இந்தியா தன்னிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.