சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி
Aug 7, 2025, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 1, 2024, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே  ‛ இண்டி’ கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம்  அரம்பாக் நகரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய பிரதமர், சந்தேஷ்காலியில் பெண்கள் படும் துன்பத்தை விட, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிலரின் வாக்குகள் முக்கியமா என்று அம்மாநில மக்கள் கேட்கின்றனர் என்றார்.

இங்கு நடந்ததை பார்த்து சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்து இருக்கும். சந்தேஷ்காலி பெண்களை மம்தா ஏமாற்றிவிட்டார். அவருக்கு பெண்களை விட அரசியல் முக்கியமாகி விட்டது என தெரிவித்தார்

இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாஜகவின் தொடர் போராட்டம் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை மேற்கு வங்க காவல்துறை கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளனர். மாநிலத்தில் ஊழல் மற்றும் குற்றங்களை மம்தா அரசு ஆதரிக்கிறது. அவர்களை விடுவிக்க மம்தா போராட்டம் நடத்துகிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் வளர்ச்சியையும் அவர் விரும்பவில்லை. அரசு வேலை முதல் கால்நடை கடத்தல் என அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் ஊழல் செய்கிறது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இனியும் திரிணமுல் கொள்ளையடிக்க அனுமதிக்கலாமா?. அவர்களை விடமாட்டேன். திரிணமுல் காங்கிரசின் முதல் எதிரி நான் தான். அக்கட்சியின் ஊழலுக்கு முடிவு கட்டப்படும் என தெரிவித்தார்.

ஷாஜஹான் தப்பி ஓடிய இரண்டு மாதங்களாக யாரோ ஒருவர் அவரைக்  காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, ஒவ்வொரு காயத்திற்கும் தங்கள் வாக்கு மூலம் பதிலளிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Tags: PM Modiwest bengalMamata BanerjeeINDIA bloc
ShareTweetSendShare
Previous Post

சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் கோவிந்தா என பக்தி முழக்கம்!

Next Post

பெங்களூரு வெடிவிபத்து – என்.ஐ.ஏ அதிரடி!

Related News

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies