2026-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட அரசியல் வேரோடு அகற்றப்படும்! - அண்ணாமலை பேச்சு
Oct 4, 2025, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட அரசியல் வேரோடு அகற்றப்படும்! – அண்ணாமலை பேச்சு

Web Desk by Web Desk
Mar 3, 2024, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற, இந்திய ஜனநாயகக் கட்சியின் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ மாநில மாநாட்டில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

2024 ஆம் ஆண்டு நாம் பேசும், பண அரசியலுக்கு எதிரான, ஊழலற்ற, நேர்மையான அரசியலைக் கொள்கைகளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் ஐயா பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கும் மக்களுக்கும் செய்துள்ள பணிகள் போற்றுதலுக்குரியவை.

தனது சொந்தப் பணம் சுமார் 127 கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டிற்காகச் செலவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார்.

ஐயா பாரிவேந்தர் அவர்கள் முயற்சியால், பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் புதிதாகத் தொடங்கவிருக்கும் 100 சைனிக் பள்ளிகளில் முதல் பள்ளி, பெரம்பலூரில் அமைக்கவும், தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்யத் தயாராகவிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, ஐயா பாரிவேந்தர், மீண்டும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் கொண்டு வர முழுமுயற்சி மேற்கொண்டுள்ள அத்தனை திட்டங்களையும், அவரே தொடங்கி வைக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசையும் விருப்பமும்.

அதனை நிறைவேற்ற அனைவரும் நிச்சயம் உழைப்போம். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ணன் ரவி பச்சமுத்து, தமது தந்தையாரை விட ஒரு படி மேலாக, தமிழகத்தின் மீதும், மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் அளவற்ற பற்று கொண்டவர். அவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில மாநாட்டின் கொள்கையான, தமிழ் வளர்ச்சி, நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில்தான் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும், தமிழ் மொழியின் பெருமையை நமது பாரதப் பிரதமர் அவர்கள் கொண்டு செல்கிறார். தமிழ் மொழியின் புகழ் மேலும் பரவ, நமது பிரதமர் மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.

மாநாட்டின் மற்றொரு கொள்கையான தேசம் காப்பது, பிரிவினை பேசும் திராவிட அரசியலை அழிப்பதில்தான் முழுமை பெறும். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும். கடந்த 33 மாதமாக ஆட்சியில் இருக்கும் திமுக ஒரு சாதனை செய்யாமல், மத்திய அரசைக் குற்றம் சாட்டி வருகிறது எனத் தெரிவித்தார்.

ராஜராஜ சோழன் போல், நாடாளுமன்றத்தில் செங்கோலை சாட்சியாக வைத்து, பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழி மூத்த மொழியாக இருந்தாலும், நாட்டில் உள்ளவர்கள் அதன் கலாசாரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. அந்த கூட்டில் இருந்து விடுவித்து, உலகம் முழுவதும் படம் பிடித்துக் காட்டுவதற்கு பிரதமர் மோடி தேவைப்பட்டு இருக்கிறார்.

தமிழ் மொழி வளர, தமிழகம் சிறக்க, வளர்ச்சி அரசியலை தமிழகம் முன்னெடுக்கும். இந்திய ஜனநாயகக் கட்சியின் இந்த தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் மாநில மாநாட்டின் மாபெரும் வெற்றி, ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான, தேசியம் சார்ந்த அரசியலைப் பேசும் அனைத்து சக்திகளுக்கும் மாபெரும் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

Tags: bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

உலக வன உயிரின தினம் : பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies