தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து, பாஜக சார்பில் 7 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தொகுதி பங்கீடு தொடர்பாகச் சந்திப்பு இன்று சென்னையில் சந்திப்பு நடைபெற்றது.
இதில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் – தலைவர் ஜான் பாண்டியனிடம், முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.