நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவையில் வாக்களிக்க மற்றும் பேசுவதற்கு எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றம் எனவும், இது குறித்த விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
SWAGATAM!
A great judgment by the Hon’ble Supreme Court which will ensure clean politics and deepen people’s faith in the system.https://t.co/GqfP3PMxqz
— Narendra Modi (@narendramodi) March 4, 2024
ஸ்வாகதம்!
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஒரு சிறந்த தீர்ப்பு, தூய்மையான அரசியலை உறுதி செய்யும் மற்றும் அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.