WPL : மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!
Oct 2, 2025, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!

Web Desk by Web Desk
Mar 10, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 16வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஹேமலதா 74 ரன்களும், பெத் முனி 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பாரதி 21 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சைகா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இஸ்மாயில், சாஜனா, மேத்யூஸ், பூஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஸ்திகா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான மேத்யூஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் 10 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 48 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் 191 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இது மட்டுமின்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது 95 ரன்களை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத்துக்கு வழங்கப்பட்டது.

Tags: WPL: Mumbai Indians qualified for the play-off round!
ShareTweetSendShare
Previous Post

டெல்லி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் – மீட்புப் பணிகள் தீவிரம்!

Next Post

சடலங்கள் விற்பனை : ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies