நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் : பிரதமர் மோடி உறுதி!
Sep 10, 2025, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் : பிரதமர் மோடி உறுதி!

Web Desk by Web Desk
Mar 11, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் ஆண்டுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில்  வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம்  நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்  நரேந்திர மோடி  நமோ ட்ரோன் சகோதரிகளின் விவசாய ட்ரோன் செயல் விளக்கங்களை பார்வையிட்டார்.

நாடு முழுவதும் 11 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ஒரே நேரத்தில் ட்ரோன் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். அப்போது, 1,000  சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களையும் பிரதமர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர், மேம்பட்ட இணைப்பு காரணமாக, இன்று, நாட்டின் தொலைதூரத்தில் உள்ள பெண்கள், பெரிய நகரங்களில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடிகிறது. ஒரு காலத்தில் தங்கள் ஆசைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டு, வீட்டு வேலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பெண்கள், தற்போது முன் வந்து தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்கின்றனர் என்றார்.

எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவோம் என பிரதமர் உறுதியளித்தார். நாரி சக்தி’யை செயல்படுத்துவதற்கும், பெண்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.

பால் மற்றும் காய்கறி பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வது மற்றும் மருந்து விநியோகம் போன்ற துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது பற்றி விரிவாகக் கூறினார்.

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சியை ‘நாரி சக்தி’ வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். இன்று, ஐடி, விண்வெளி மற்றும் அறிவியல் துறைகளில் இந்தியப் பெண்கள் பெயர் பெறுவதை பார்க்கிறோம்.

வணிக பெண் விமானிகளின் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. விண்ணில் பறக்கும் விமானமாக இருந்தாலும் சரி, விவசாயத்துக்கான ஆளில்லா விமானமாக இருந்தாலும் சரி, இந்திய பெண்கள்  பின் தங்கவில்லை. சுய-உதவி குழுவில் (SHG) ஈடுபட்டுள்ள பெண்களின் கடின உழைப்பு  தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய குழுவாக மாற்றியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி நான் பேசும்போதெல்லாம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்னை கேலி செய்தன. ஆனால் மோடியின் திட்டங்கள் அனுபவத்தால் உருவாக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.

வரும் ஆண்டுகளில், நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் விரிவடைய உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் சுய உதவிக் குழுக்கள் விரிவடைந்துள்ளன. இந்தியாவில் சுய உதவிக்குழுக்கள் பெண்கள் அதிகாரமளிக்கும் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

Tags: PM Modidelhi'Nari Shaktitechnological revolution
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து கொள்ள வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Next Post

வாகனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்க்கை கியரையும் இந்த சாலை மாற்றும் : பிரதமர் மோடி

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies