மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இன்று (2024 மார்ச் 12) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,
மொரீஷியஸ் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் ஆர்வமுள்ள இளைஞர்களின் கனவுகளை அடைவதற்கான ஏணிகள் மட்டுமல்ல; அவை மனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் தளங்கள். இந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகத்திலிருந்து சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டம் பெறுவது தமக்கு குறிப்பாக பெருமை அளிப்பதாக அவர் கூறினார்.
இது அனைத்து இளைஞர்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு, அவர்களின் தனித்துவமான ஆர்வத்தைக் கண்டறியவும், அவர்களின் கனவுகளைத் தொடரவும் ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி சக்தியின் உருமாறும் தாக்கம் குறித்த தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, கல்வியே நம்மை பாதிப்பு மற்றும் இழப்பிலிருந்து வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்கு அழைத்துச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவை நாளைய அறிவுசார் பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்ல இளைஞர்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதை இந்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடைய புதிய தேசிய கல்விக் கொள்கை, இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்தி, மனிதகுலத்தின் நல்வாழ்வை மேம்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகளின் சக்தி மையமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்காலத்தை நோக்கிய இந்த உற்சாகமான பயணத்தில், மொரீஷியஸ் போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா ஆவலுடன் உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 400 மொரீஷியஸ் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவதையும், சுமார் 60 மொரீஷியஸ் மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வியைத் தொடர உதவித்தொகை பெறுவதையும் குறிப்பிடுவதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மொரீஷியஸை நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நேசத்துக்குரிய கூட்டாளியாகவும், ஆப்பிரிக்கா சென்றடைவதில் முக்கிய நாடாகவும் இந்தியா காண்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
இந்தியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையேயான சிறப்பான நட்புறவுக்கு மக்களிடையேயான வலுவான தொடர்புகள் அடித்தளமாக உள்ளன என்று குறிப்பிட்ட அவர், மொரீஷியஸ் மற்றும் இந்திய இளைஞர்கள் இந்த சிறப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.