தேர்தல் களம் 2024, மீண்டும் மோடி வேண்டும் மோடி : அண்ணாமலை
Oct 26, 2025, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் களம் 2024, மீண்டும் மோடி வேண்டும் மோடி : அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 16, 2024, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தன்னம்பிக்கையுடன், ஊழல் பேர்வழிகளை புறம் தாள்ளி, நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் பாரதநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.

நம் தேசத்தின் அடுத்த பாரதப்பிரதமர் யார்? என்பதை நிர்ணயிக்கப் போகும் இந்தத் தேர்தலில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று நான் மக்களிடம் பணிவாக வேண்டுகிறேன்.

100 வயதைக் கடந்த 2.18 லட்சம் மூத்த குடிமக்கள் வாக்களிக்கும் தேர்தல், சுமார் 1.82 கோடி புதிய வாக்களர்கள் பங்கு பெறப்போகும் தேர்தல், நாட்டின் 47.10 கோடி பெண்களும், 49.70 கோடி ஆண்களும் வாக்களிக்கும், சுமார் 97 கோடி மக்கள் வாக்களிக்கும் மிகப் பிரம்மாண்டமான தேர்தல்.

சுமார் 55 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல். 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல்திறன் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளும், 85 வயதுக்கும் அதிகமான மூத்த குடி மக்களும் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் தேர்தல், மிகவும் பாதுகாப்பான நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது.

நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்து உழைக்கும் பிரதமர், குடும்ப ஆட்சியை தவிர்த்து, நாட்டு மக்களையே தன் குடும்பமாக நினைக்கும் பிரதமர், உலக நாடுகளில் இந்தியத் திருநாட்டின் பெருமைகளை உயர்த்திய பிரதமர், எழை எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் எளிதாகக் கிடைக்கச் செய்த பிரதமர், கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் நாட்டின் சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றிய பிரதமர், புதிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபின் பெருமை போற்றும் செங்கோலை நிறுவி, நம் தமிழ் மொழியைத் தன் தாயைப்போல நேசிக்கும் நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்து பெருவாரியாக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று தமிழக மக்களை வேண்டுகிறேன்.

தமிழகத்தில் மிகக் குறுகிய காலத்தில், வரும் 20.03.24 அன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தன்னம்பிக்கையுடன், ஊழல் பேர்வழிகளை புறம் தாள்ளி, நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம். ஆகவே தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக் கடமையை தவறாது நிறைவேற்ற முன் வரவேண்டும் என்று வேண்டுகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: bjpannamalaiparlimentary election
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

Next Post

தேர்தலை ED – IT கண்காணிக்கும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies