2024 மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக மார்ச் 20-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியானது.
இதில், பல்வேறு வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குறுதிகளைப் படித்துப் பார்த்த பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கொந்தளித்துவிட்டனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று சொல்லியுள்ளனர். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருபவை, அப்படி இருக்க எப்படி திமுக இதை செய்யமுடியும் எனத் தெரியவில்லை.
அடுத்து, தமிழகம் முழுக்கச் சுங்கசாவடிகளை அகற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி எல்லாம் மத்திய அரசின், மத்திய தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளவை. எனவே, இதில், மாநில அரசுக்கு வேலையை இல்லை. நிலை இப்படி இருக்க எப்படி வாக்குறுதி கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை.
மூன்றாவதாக, இந்தியா முழுமைக்கும் பெண்ளுக்கு ரூ.1000 வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக என்பது ஒரு மாநில கட்சி. தேசிய கட்சி அல்ல. அப்படி இருக்கையில், ஒரு மாநில கட்சி எப்படி, இந்தியா முழுமைக்கும் இதனை அறிவிக்க முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது.
நான்காவதாக, மகளிர் உரிமைத் தொகை பெரும் பெண்கள், தங்களது வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால், பணம் பிடித்தம் செய்வது ரிசர்வ் வழங்கியின் விதிமுறையில் உள்ளது. அப்படி இருக்கையில், அதை நீக்குவோம் என்பது அறியாமையின் உச்சம்.
அதுபோலவே, தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நாடு முழுக்க நடைபெறும் போது, தமிழகத்தில் மட்டும் எப்படி அதை நிறுத்த முடியும்.
எதைஎதை எல்லாம் செய்ய முடியாதோ அதை எல்லாம் செய்யமுடியும் என பொய் வாக்குறுதி கொடுத்துள்ளது திமுக என கொந்தளிக்கின்றனர்.